அமெரிக்காவில் தொற்று நோய்க்கு மத்தியில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அதிகளவில் சிறுவா்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்ட பெரும்பாலான பாடசாலைகள் கடந்த மாதம் முதல் திறக்கப்பட்டன.
இந்நிலையில் சிறுவா்கள் மத்தியில் கடந்த ஏப்ரலில், 2 வீதமாக இருந்த பாதிப்பு தற்போது, 10 வீதமாக அதிகரித்துள்ளதாக, அமெரிக்க சிறுவா் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
மிசிசிபி மாகாணத்தில் தான் அதிக அளவில் பாடசாலை சிறுவா்களும் ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு, ஜூலை மாதமே பாடசாலைகள் திறக்கப்பட்டன. இதுவே பாதிப்பு அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது.
சிறுவர்கள் பாடசாலைகளுக்கு முக கவசம் அணிந்து வந்தாலும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் செப்டம்பா் 19 வரையான காலப்பகுதியில் அமெரக்கா முழுவதும் 5 முதல் 17 வயது வரையிலான 2 இலட்சத்து,77ஆயிரம் சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாக 12 முதல் 17 வயது வரையான 51 சிறுவா்கள் பலியாகியுள்ளனர்.
எனினும் கொரோனாவால் பெரும்பாலான சிறுவா்களுக்கு லேசான பாதிப்புக்களே ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சேர்ப்பதும் இறப்பு விகிதமும் பெரியவர்களை விட சிறுவர்களிடம் குறைவாக உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.